சென்னை: அதிமுக என்ற திராவிட கட்சி ஒன்றுபட்டால்தான் அனைவருக்கும் சிறப்பாக இருக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளராக தம்மை அழைத்துக் கொள்ளும் சசிகலா வலியுறுத்தி உள்ளனர். ஆளுநராக அதிமுக அணிகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது; ஆனால் அனைவரும் ஒன்றுபட்டால் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆரின் 106-வது பிறந்தாளை அதிமுக இன்று கொண்டாடியது. சென்னை தியாகராயர் நகர் இல்லத்தில் எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களை சசிகலா சந்தித்தார்.
அதிமுகவினரை சந்திப்பதில் எந்த தயக்கமும் இல்லை. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை விரைவில் நான் சந்திக்க இருக்கிறேன். அதிமுகவினர் ஜெயலலிதா சொன்னதை மட்டும் செய்யக்கூடியவர்கள். மக்களை அண்ணா திமுக ஏமாற்றாது. அண்ணா திமுகவினர் அனைவரும் ஒருங்கிணைந்து சிந்தித்து செயல்பட வேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படும். ஆளுநர் மாளிகை சொல்லுகிற திருத்தங்கள் சேர்க்கப்பட்டு பின்னரே அச்சிடப்படும். ஆனால் திமுக ஆட்சியில் எப்படி செயல்படுகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த விவகாரம் தெரியாமல் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. ஆளுநர் என்கிற பதவியில் உள்ளவரை இப்படித்தான் நடத்த வேண்டும் என விதிகள் உண்டு. தமிழ்நாட்டு ஆளுநரையும் உரிய மரியாதையுடன் தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும். வாக்களித்த மக்களுக்கு நல்லது எது என்பதை யோசித்துதான் திமுக அரசு செயல்பட வேண்டும். இவ்வாறு சசிகலா கூறினார்.
0 comments:
Post a Comment