மதுரை : அலங்காநல்லூரில் இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் காளை என அறிவிக்கப்பட்டு களமிறக்கப்பட்ட காளை, திமிலில் கை போட்ட மாடுபிடி வீரரைச் சாய்த்துத் தள்ளி, துள்ளி ஓடி வெற்றி பெற்றது.
சசிகலாவின் நிதி பராமரிப்பில் மதுரை மேலூரைச் சேர்ந்த பெண்மணி வளர்த்து வரும் காளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கியது.
சசிகலாவின் மாட்டைப் பிடித்தால் சைக்கிள் பரிசு என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு வீரர் மாட்டைப் பிடிக்க முயற்சித்த நிலையில் அவரையும் தள்ளிவிட்டு துள்ளி ஓடியது காளை.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். மாடு பிடி வீரர்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 1000 காளைகளும், 300 வீரர்களும் களம் காண்கின்றனர். முன்னதாக வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, உடற்தகுதியுள்ள காளைகளும், வீரர்களும் போட்டியில் களமிறக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பு மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
0 comments:
Post a Comment